டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் மே 8ல் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சீமான் அவதூறாக பேசியதாக வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.