கோவையில் மாநகராட்சி அனுமதி பெற்று சாலையோர விளம்பர பலகைகள் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டு சில நிறுவனங்கள் இந்த பணியை செய்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக அசோக்குமார் நியமிக்கப்பட்ட பிறகு பிரபலமான விளம்பர நிறுவனம் ஒன்றுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த பிரபல நிறுவனத்திற்கு கோவை மாநகர் முழுவதும் விளம்பர போர்டு வைக்க மாநகராட்சி அதகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவத்தவுடன், ஏற்கனவே அரசு அனுமதி பெற்று விளம்பர பலகை வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து போர்டை கழற்ற சொல்லி அழுத்தம் கொடுத்துள்ளார்.
அனுமதி பெற்ற போர்டை எதற்கு கழற்ற வேண்டும் என நிறுவனம் தரப்பில் விளக்கம் கேட்ட பிறகு, ‘‘நீங்க கழற்றாவிட்டால் நானே ஆளை வைத்து அகற்றுவேன்’’ என அதிகார தொணியில் மிரட்டியிருக்கிறார். மேலும் மாநகராட்சி அனுமதியுடன் வைக்கப்பட்ட போர்டுகளை ஆட்டோ டிரைவர்களை வைத்து இரவோடு இரவாக கழற்றியிருக்கிறார்.
அத்துமீறி செயல்படும் துணை ஆணையர் அசோக்குமார் குறித்து கோவை மாநகர ஆணையர் சரவண சுந்தரிடம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் புகாராக அளித்துள்ளனர். ஆணையர் ‘‘அரசு அனுமதி பெற்று இருந்தால் காவல்துறை அதை அகற்ற முடியாது” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஆணையர் உத்தரவுக்கு பிறகும் அசோக்குமார் தொடர்ந்து இரவு நேரத்தில் போர்டுகளை அகற்ற வருவதால் பாதிக்கப்பட்ட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆணையரிடம் மீண்டும் முறையீடு செய்ய அவரோ ‘என் பேச்சை கேட்க்காமல் இருக்கிறார். அரசியல் செல்வாக்கை வைத்து அவர் இப்படி ஆட்டம் போடுகிறார்’ என புலம்பியிருக்கிறார்.
பெரு நிறுவனம் ஒன்றில் ‘விட்டமினை’ பெற்றுக்கொண்டு தொடர்ந்து விளம்பர நிறுவனங்களுக்கு குடைச்சல் கொடுத்து வரும் அசோக் குமார் மீது காவல்துறை தலைமை நடிவடிக்கை எடுக்குமா?