‘2010ல் நீட் தேர்வை காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கொண்டுவந்தபோது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தில் தான் 2011 ஆண்டில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியவில்லை அந்த நிலை மீண்டும் 2026 தேர்தலில் திரும்பும்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் என கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் பேசும்போது, ‘‘கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று மக்களிடத்தில் பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலினும், அவரது மகனும் உதயநிதி ஸ்டாலினும் செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து மக்களை ஏமாற்று வகையில் தீர்மானங்களை போடுவது மட்டுமல்லாது,அதனைத் தொடர்ந்து நீட்டுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து வாங்கி அதை நாங்கள் ரத்து செய்வோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த கையெழுத்து எல்லாம் சேலத்தில் திமுக நடத்திய இளைஞரணி மாநாட்டில் குப்பை கூடத்தில் கிடந்தது.

அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமையும் அப்போது நீட் தேர்வை செய்யப்படும் என்று போகாத ஊருக்கு வழி சொல்வது போல மீண்டும் போலியான வாக்குறுதிகளை கொடுத்தனர்.

தற்போது ஸ்டாலின் திமுக ஆட்சியில் நீட் தேர்வை எதிர்கொள்ளாமல் 22 அப்பாவி மாணவர்கள் பலியாகி உள்ளார்கள், இதற்கு திமுக கொடுத்த பொய்யான தேர்தல் வாக்குறுதி தான் என மக்களிடத்தில் திமுக மீது கடுமையான கோபம் ஏற்பட்டுள்ளதை திசை திருப்பும் வகையில் மீண்டும் நீட் தேர்வு ரத்து என்ற நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்று வருகிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? நீங்கள் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், 2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசிடம் நீங்கள் கூட்டணி வைத்தீர்கள் அதன் மூலம் மத்திய அமைச்சராக முக அழகிரி,மத்திய இணை அமைச்சர்களாக ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன், பழனி மாணிக்கம், நெப்போலியன் இருந்தனர் அப்போது திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற 27 பேர் இருந்தனர். திமுகவை மீறி எந்த திட்டமும் காங்கிரஸ் கொண்டு வர முடியாத நிலையில் இருந்தது.

அந்த காங்கிரஸ்,திமுக கூட்டணி ஆட்சியில் போது குலாம்நபி ஆசாத் அமைச்சராகவும் ,இணை அமைச்சராக காந்திசெல்வன் இருத்த போது 21.12.2010 நீட் தேர்வு குறித்து மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மசோதா முன்மொழிந்த போது இதற்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அந்த காலகட்டங்களில் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடனடியாக உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது, நீங்கள்தான் அனைத்து துறைகளிலும் கையாண்டீர்கள் அப்போது நீட் தேர்வு குறித்து ஏதாவது அறிக்கை வெளியிட்டீர்களா? அல்லது மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தீர்களா என்பதை ஆதாரத்துடன் நீங்கள் வெளியிட தயாரா?

நீட் தேர்வில் நீங்கள் செய்த துரோகத்திற்கு தான் 2011 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உங்களை எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வழங்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதனை தொடர்ந்து பத்து ஆண்டுகள் மக்கள் உங்களை வனவாசம் செய்ய வைத்தார்கள்

அது மட்டுமல்ல 2013 உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அந்த அந்த மாநிலங்கள் விருப்பப்படி நீட் தேர்வை அமல்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது இந்த தீர்ப்பு அப்படியே தொடர்ந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது, அப்போது மத்திய அரசு தான் மறு சீராய்வு மனு போடப்பட்டது இதன் விளைவாகத்தான் 2017 ஆம் ஆண்டு நீட் வந்தது .2014 வரை நீங்கள் மத்திய அரசிடம் அங்கம் வகித்தீர்கள் அப்போது இது குறித்து குறித்து நீங்கள் கண்டித்து உள்ளீர்களா?

ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் கடுமையாக சட்டபோரட்டம் செய்தார்கள் மேலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசு அனுப்பினார்கள்.2020 ஆண்டு கொரோனா காலத்தில் கூட நீட் தேர்வு வேண்டாம்,12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்று அவசர சட்டத்தை உருவாக்கி தரணும் எடப்பாடியார் மத்திய அரசு கடிதம் எழுதினார்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 7.5 சகவீத இட ஓதுக்கீட்டை எடப்பாடியார் கொண்டு வந்தார். இதன் மூலம் இதுவரை 3,500 அரசு பள்ளி மாணவர்கள் பயன்பட்டார்கள்.

மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் தான் 23 மேற்ப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது, குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவகல்லூரிகளை எடப்பாடியார் கொண்டு வந்தார், இந்திய அளவில் மொத்த மருத்துவர்களில் 8ல் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் உருவாக்கி உள்ளார் என்பதை ஸ்டாலின் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், உங்களால் ஒரு மருத்துவ கல்லூரியை கூட இந்த நான்காண்டுகளில் கொண்டு வர முடியவில்லை.

ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதையெல்லாம் நினைவுபடுத்தி பாருங்கள் இதன் மூலம் யார் நீட் தேர்வுக்கு திமுக தான் துரோகம் செய்தது என்று தெளிவாக தெரிந்து விடும். தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்தால் 2011 சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்வியைப் போல 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடத்தை புகட்டுவார்கள் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும்’’ என கூறினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal