வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து இன்று(டிச.10) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த 24 மணி நேரம், இந்த தாழ்வுப் பகுதி ஒரே இடத்தில் நகராமல் இருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;

காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு பகுதியில் தமிழகம், இலங்கை நோக்கி நகர்கிறது. அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’’ இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal