தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் பாராளுமன்ற தேர்தல்  நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது. தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும். வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6  மணிக்குள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது  என தெரிவித்துள்ளார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal