தினம் தினமும் குடித்துவிட்டு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்கிறார் என்றுதான் மனைவிமார்கள் கணவன் மீது புகார் அளிப்பது வழக்கம்.

ஆனால், பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு அரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் கணவர் உடலுறவு கொள்ள மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் மே 31, 2021 அன்று திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் அவருடன் உடல் உறவு கொள்ள அவரது கணவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

இதனால் அந்தப் பெண் கணவரோடு வாழாமல் தந்தை வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வித்தியாசமான… விநோதமான உலகமடப்பா…?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal