சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6-ந்தேதி நடைபெற உள்ளது.

பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.

இதற்காக ஜனாதிபதி ஆகஸ்ட் 6-ந்தேதி சென்னை வர உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal