துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரோஜா செடியில் பூக்களை மாளவிகா பறிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள், பூப்பறிக்க நீயும் போகாதே.. உன்ன பாத்தாலே பூக்களுக்குள் கத்தி சண்டையடி என்ற பாடல் வரிகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal