சென்னையில் அதிகாலையிலேயே இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை துணை ஆணையர் தரணிதரன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal