தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நாளை வெளி​யாக உள்ள நிலை​யில், குதிரை பேரத்தை தடுப்​ப​தற்​காக, தவெக தலை​வர் விஜய் தனது கட்சி நிர்​வாகி​களு​டன் முக்​கிய ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், தவெக முதல்​முறை​யாகத் தனித்​துப் போட்​டி​யிட்​டுள்​ளது. கட்​சி​யின் தலை​வர் விஜய், பெரம்​பூர் மற்​றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வ​தால், அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் எதிர்​பார்ப்பு நில​வு​கிறது.

சமீபத்​தில் வெளி​யான பல்​வேறு கருத்​துக் கணிப்​பு​கள் திமுக​வுக்கு சாதக​மாக இருப்​ப​தாகத் தெரி​வித்​தா​லும், கள நில​வரம் தங்​களுக்​குச் சாதக​மாக இருப்​ப​தாக தவெக நம்​பு​கிறது. இச்​சூழலில், வெற்றி பெறும் தவெக வேட்​பாளர்​களை ‘கு​திரை பேரம்’ மூலம் தங்​கள் பக்​கம் இழுக்க திமுக மற்​றும் அதி​முக திட்​ட​மிட்​டிருப்​ப​தாக விஜய்க்கு ரகசி​யத் தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

இதையடுத்​து, விஜய் கடந்த 2 நாட்​களாக தனது கட்​சியை சேர்ந்த முக்​கிய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார். இதுகுறித்​து தவெக வட்டாரங்​கள் கூறிய​தாவது: ‘‘திமுக, அதி​முக​வின் குதிரை பேரம் மூலம் இழுக்​கும் நடவடிக்​கையை முறியடிக்க சமீபத்​தில், 234 தொகுதி வேட்​பாளர்​களு​ட​னும் விஜய் அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

“வெற்​றிச் சான்​றிதழ் பெற்​றவுடன் நேராகப் பனையூர் தலைமை அலு​வல​கத்​துக்கு வர வேண்​டும்” என அவர் அப்​போது உத்​தர​விட்​டுள்​ளார். வாக்​குப்​ப​திவு நாளன்று சில இடங்​களில் திமுக, அதி​முக​வினர் இடையூறுகளை ஏற்​படுத்​தக் கூடும் என விஜய்க்​குத் தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்​து​தான், தலைமை தேர்​தல் அதி​காரியைச் சந்​தித்​து, வாக்கு எண்​ணும் மையங்​களில் கூடு​தல் பாது​காப்பு கோரி மனு அளிக்குமாறு ஆதவ் அர்​ஜு​னாவுக்கு உத்​தர​விட்​டார். அதன்​படி​தான், அவர் நேற்று மனு அளித்​திருந்​தார்.

இதையடுத்​து, வாக்கு எண்​ணிக்​கை​யின் போது ஏதேனும் அச்​சுறுத்​தலோ, நெருக்​கடியோ ஏற்​பட்​டால், வேட்​பாளர்​கள் தனக்கு நேரடி​யாகத் தொடர்பு கொள்​ளலாம் என விஜய் தெரி​வித்​துள்​ளார். இதற்​காக ஒரு பிரத்​யேக எண் வழங்​கப்​பட்​டுள்​ளது.

கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் மற்​றும் ஆதவ் அர்​ஜுனா ஆகியோரிடம், “நமது வேட்​பாளர்​கள் ஒவ்​வொரு​வரும் பத்​திரம். அவர்​களைப் பாது​காப்​பாகப் பனையூருக்​குக் கொண்டு வந்து சேர்க்க வேண்​டியது உங்​கள் பொறுப்​பு” என விஜய் அழுத்​த​மாகக் கூறி​யுள்​ளார்’’ என்றர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal