மே மாதம் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய திரிஷா, அதற்கு முன்பாகவே பிறந்த நாளை கொண்டாடியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். தமிழில், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
‘அபியும் நானும்’ படத்துக்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் த்ரிஷா. கடந்த 24 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ‘பிருந்தா’ மூலம் வெப்சீரிஸில் தடம் பதித்தார்.
விஜயின் ‘லியோ’, ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். த்ரிஷா நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்தப் படம் மே மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 75-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள த்ரிஷா, கடந்த 3 மாதங்களாக எந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது. புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகாத நிலையில், சினிமாவிலிருந்து நடிகை த்ரிஷா விலகுகிறாரா? என்பது குறித்து பேசப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
த்ரிஷாவின் சினிமா வாழ்க்கை ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் உடன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற மே மாதம் 4ம் தேதி த்ரிஷாவின் பிறந்தநாள் வரவுள்ளது. அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக இப்போதே த்ரிஷா பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
“Pre Birthday” என்கிற பெயரில் தோழிகளுடன் நேற்றிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள த்ரிஷா அதில், “எவ்விதப் பெயரிட்டும் அழைக்க முடியாத சில நட்புகளும் உண்டு” என்று தோழிகள் குறித்து சிலாகித்துள்ளார். த்ரிஷாவின் இந்தப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
மே 4ம் தேதி விஜய்யின் த.வெ.க.வுக்கு வெற்றி கிடைக்காமல் போனால் பிறந்த நாளை கொண்டாட முடியாது என நினைத்து முன்னரே கொண்டாடியிருப்பாரோ? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை!
