சேலத்தில் ஓரினச்சேர்க்கை காமத்தால் கணவன்களை விட்டுவிட்டு மனைவிகள் மாயமாகிவிட்டனர். இதனால், குழந்தைகள் மற்றும் இரு கணவன்களும் தவித்து வருகின்றனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளியின் மனைவி அழகி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லை. இவரது பக்கத்து வீட்டில் சுகன்யா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். செல்விக்கு 30 வயது ஆகிறது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பத்தில் பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் அழகிக்கும், சுகன்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இருவரது கணவர்களும் வேலைக்கு சென்ற சமயங்களில் சுகன்யாவின் வீட்டுக்கு சென்று அழகி பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இருவரும் தங்கள் குடும்ப பிரச்சினைகளை பகிர்ந்துகொள்வதும், கொஞ்சி கொஞ்சி பேசுவதுமாக இருந்தனர். நாளடைவில் இவர்களது நெருக்கம் அதிகமானது.

பெண்கள் தானே பழகுகிறார்கள் என்று அவர்களது கணவன்மார் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த சூழலில் சுகன்யா வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார். அவருடன் அழகியும் வேலைக்கு போக தொடங்கினார். சுகன்யா தனது 3 குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை விட அழகியுடன் இருக்கும் நேரமும் நெருக்கமும் அதிகமானது. இருவரின் அதிகப்படியான அன்பு நாளடைவில் லெஸ்பியன் உறவாக மாறியது. அடிக்கடி ஊர் ஊராக சுற்றியும் அவர்கள் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் மெல்ல இருவரது கணவர்களுக்கும் தெரியவந்தது. இருவீட்டிலும் மனைவியை கண்டித்தனர். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் சுகன்யாவின் கணவர் வீட்டை காலி செய்து விட்டு திம்மநாயக்கன்பட்டிக்கு குடி பெயர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அழகி திடீரென வீட்டிலிருந்து மாயமானார். அவரது கணவர் பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை . அப்போது வீட்டில் படுக்கை அறையில் அழகி கைப்பட எழுதிய கடிதம் இருந்தது. அதனுடன் தாலியும் இருந்தது. கடிதத்தில் எனக்கு கணவருடன் வாழ பிடிக்க வில்லை. அதனால் தான் தாலியை கழட்டி வைத்திருக்கிறேன். நான் எனக்கு பிடித்த சுகன்யாவுடன் செல்கிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று விவரத்தை கூறி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து அழகியை தேடி வந்தார். அதேவேளையில் சுகன்யாவையும் காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவரது கணவரும் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஒரே நேரத்தில் மாயமான 2 பேரையும் தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 பெண்களையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 பெண்களுக்கு இடையேயான லெஸ்பியன் உறவும், ஏற்கனவே ஒரு முறை அவர்கள் ஊரைவிட்டு ஓடியதும் தெரியவந்தது.

இரு வீட்டாரும் அவர்களை அழைத்துவந்து அறிவுரைகள் கூறினர். சுகன்யாவின் வீட்டில் அவருக்கு புத்திமதி கூறியதோடு 3 குழந்தைகள் எதிர்காலம் கருதி நடந்து கொள் என்று கண்டித்தனர். இந்த சூழலில்தான் மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு ஓட்டம் பிடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் எங்கு உள்ளனர்? என்பது குறித்து அவர்களது செல்போன் எண்களை வைத்து தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

விரைவில் அவர்கள் எங்கிருந்தாலும் மீட்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் தங்களது தாயை காணாமல் செல்வியில் 3 குழந்தைகளும் கதறி அழுதபடி தவித்து வருகிறார்கள். 2 பெண்களின் கண்ணை மறைத்த ஓரின காமம் இரு வீட்டினரையும் கலங்கவைத்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal