பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தி.மு.க. கவுன்சிலர் நிரந்திரமாக நீக்கப்பட்டுள்ளார்!

கடலூர் தனியார் பள்ளியில் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி தாளாளரும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் புகாரில் சிக்கிய பக்கிரி சாமியை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்து துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலம் நகராட்சி 30வது வார்டு கவுன்சிலர் ஆக இருக்கும் பக்கிரிசாமி தனியார் பள்ளியின் தாளாளராகவும் இருக்கிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பக்கிரிசாமி திமுகவை விட்டு நீக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal