உதயநிதி ஸ்டாலின் நாளை மகுடம் சூடவுள்ள நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார்.

முதல்கட்டமாக அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பானது சென்னை, பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஏற்கனவே, ‘வாரிசு’ பட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகர் விஜய்க்கும் ‘மோதல்’ ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்கால அரசியல் குறித்து நடிகர் விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal