பட்டி முதல் சிட்டி வரை பாப்புலராக வலம்வரும் ராஜலட்சுமி செந்தில் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் “என்ன மச்சான்” மற்றும் “ஊ…சொல்றியா” ஆகிய பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜலட்சுமி செந்தில் முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”.என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது..

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு துவங்கும் நிலையில் பாடலில் மட்டுமல்லாது நடிப்பிலும் சிறந்து விளங்குவாரா என்று பாடகி ராஜலட்சுமி செந்திலின் ரசிகர்கள் எதிர்பாத்து  காத்துக்கொண்டிருக்கின்றனர்.

By Porkodi