அதிமுகவில் ஒருக்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருக்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தநிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒன்றை தலைமை வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கம் செய்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தார். அதிமுக உள்கட்சி விவகாரம் இவ்வாறு சென்று கொண்டிருக்கும் நிலையில, ஓ.பன்னீர்செல்வம் 14 புதிய மாவட்ட கழகச் செயலாளர்களை நியமித்து கடந்த 24&ந்தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன், ராமநாதபுரம் – மாநிலங்களவை எம்பி தர்மர், மதுரை – ஆர்.கோபாகிருஷ்ணன், கோவை – முன்னாள் எம்எல்ஏ கோவை கே.செல்வராஜ், வடசென்னை (மேற்கு) -கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி,சென்னை (மேற்கு) – எம்.எம்.பாபு, தென் சென்னை (மேற்கு) – ரெட்சன் சி. அம்பிகாபதி, வடசென்னை (கிழக்கு) – ஜே.கே.ரமேஷ், திருச்சி புறநகர் (தெற்கு) – எம்.ஆர்.ராஜ்மோகன், வடசென்னை (தெற்கு) – டி.மகிழன்பன்,

சிவகங்கை – ஆர்.வி.ரஞ்சித் குமார், திருநெல்வேலி புறநகர் -என்.சிவலிங்கமுத்து, தென்காசி- வி.கே.கணபதி உள்பட 14 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ்யின் இந்த அறிக்கை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த புதன் கிழமை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மா.செ.க்களை நியமித்து மீண்டும் அதிரடி காட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ்.! இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக என். மனோகரன் மற்றும் வட சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்ட செயலாளராக பி.எஸ். சிவா, தென் சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்ட செயலாளராக டாக்டர் எம்.வி. சதீஷ், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக டி.ஆர். முரளி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ். கோதண்டம் ஆகியோரை நியமித்து ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு என கழக ரீதியாக செயல்பட்டு வந்த 2 மாவட்டங்கள் நிர்வாக வசதியை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மற்றும் புதுக்கோட்டை கிழக்கு என 3 மாவட்டங்களாக செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும், அதன்படி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக ராஜே.ராஜசேகரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக டி.ஜி.கலைசெல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஓ-.பி.எஸ். வழியில் சிறப்பாக செயல்படுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டிருப்பதுதான், எடப்படி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal