எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்வு பற்றி ஆலோசனைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடுவை இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணி சார்பில் நாயுடு போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிளுடனும் பேச்சு நடத்தும் பணியை ராஜ்நாத் சிங், நட்டா ஆகியோரிடம் பாரதிய ஜனதா ஒப்படைத்துள்ளது.

இன்று பின்னேரத்தில் வேட்பாளர் தெரிவு பற்றி ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. உயர்நிலைக் குழு கூடவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்து கலைஞர் சிலை திறப்பு விழாவில் வெங்கைய்யா நாயுடு கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal