அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற கோஷத்தால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு அவரது ஆதரவாளர்களுடன் வந்தார். சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்த போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் லேசான கைகலப்பில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரின் மண்டை உடைந்தது.

இந்நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமார், சண்முகம் ஆகியோருடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்,

இந்நிலையில் சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த ஆலோசனையில் தேனிமாவட்ட செயலர் சையதுகான், விருதுநகர் மாவட்ட செயலர் சாத்தூர் ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்ட செயலர் அசோகன், திருச்சி மாவட்ட செயலர் வெல்லமண்டி நடராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் , முன்னாள் எம்எல்ஏ., சிவகாசி பாலகங்காதரன், கோவை செல்வராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மற்றும் நகர, பகுதி செயலர் சிலர் பங்கேற்றுள்ளனர்.

இது போல் எதிர்கட்சி தலைவரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சிலர் பங்கேற்றனர். சேலம் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் சிலர், வைகை செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். இவருக்கு ஆதரவாக பலர் கோஷமிட்டனர்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மீது பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதில், அவரது மண்டை உடைந்தது. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரா நீ என கேட்டு தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ள

அதே போல், ‘எடப்பாடியின் ஆதரவாளரா நீ’ என கேட்டு தாக்கியதாக அதிமுக நிர்வாகி பேட்டி அதிமுக பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து ஜெயக்குமாருடன் வந்த நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்தான், ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படைய வைத்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal