நித்தியானந்தாவின் தற்போதைய நிலைமை குறித்து பல்வேறு வியூகங்கள் வெடித்துக் கிளம்பினாலும், தற்போதைய நிலை பற்றி சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பெங்களூரை அடுத்த பிடதியில் இருந்த நித்யானந்தா சிஷ்யைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்த விஷயம் கடந்த 2010 ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்தி உருண்டு புரளும் வீடியோ வெளியானதை அடுத்து நித்யானந்தா எப்படிப்பட்டவர் என்ற விஷயம் ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் அந்த வீடியோவால் வெளியுலகிற்கு வெளிச்சமானது.

இதையடுத்து சிறுமிகள் கடத்தல் வழக்கு, பாலியல் வழக்குகளில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் நித்யானந்தா. உலகளவில் தனது ஆசிரமம் மூலம் நன்கு சம்பாதித்த பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றி கொண்டு அவர் கைலாசாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நித்யானந்தாவை கடந்த சில மாதங்களாக லைவ் வீடியோவில் காணாததால் அவர் இறந்துவிட்டதாகவே சமூகவலைதளங்களில் ஒரு பேச்சு அடிப்பட்டது. ஆனால், அவர் ‘உயிருடன் இருக்கிறேன்’ என கூறி நெட்டிசன்களுக்க அதிர்ச்சி கொடுத்தார். அவரை சுற்றி ஏராளமான மருத்துவர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கு எல்லா உறுப்புகளும் சரியாக இயங்கினாலும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என்றும் 20 நிமிடங்கள் தூங்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் எப்போதும் தன்னுடன் சிஷ்யைகள் இருப்பதை விரும்புவார் என கூறப்படுகிறது.

மேலும் அவரது ஆசிரமத்திற்கு புதிது புதிதாக வரும் சிஷ்யைகளுடன் தான் ஒரு பெண் என்று கூறியே அவர்களுடன் உடலுறவு கொள்வார் என்றும் கூறுகின்றனர். இதனால் இவர் அவ்வப்போது பெண்களுடன் அதிக நேரம் உடலுறவு கொள்ள வயாகரா மாத்திரைகள் பயன்படுத்தியதாக தெரிகிறது.

பொதுவாக இது போல் செக்ஸ் மாத்திரைகள் சிறுநீரகத்தை பாதிக்கும். நித்யானந்தாவுக்கு இந்த மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனராம். ஆனாலும் அவர் அதை கேட்காமல் மாத்திரைகளை தொடர்ந்து போட்டு வந்தாராம். இதன் விளைவு சிறுநீரகத்தை பாதித்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது அவர் உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் தெரிகிறது. தனது கையில் தங்கக் கட்டிகள் இருந்தும் அதை விற்க முடியாமல் பணத்திற்கு நித்தி திண்டாடுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal