சென்னை, சிவகங்கை, டெல்லி, மும்பை என பல இடங்களில் சோதனை நடைபெற்று வரும், நிலையில் ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கிறார்கள்.

சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் ஊரில் இல்லை என்பது தான் முக்கிய விஷயம். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ப.சிதம்பரம் ராஜஸ்தானிலும், மகளை பார்ப்பதற்காக கார்த்தி சிதம்பரம் லண்டனிலும் இருக்கிறார்கள். கார்த்தி சிதம்பரத்தின் மகள் லண்டனில் படித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தப்படும் நிலையில் அங்கு பெருமளவில் அவரது ஆதரவாளர்களோ, கட்சியினரோ குவியவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதேபோல் தான் சிவகங்கை மற்றும் டெல்லியிலும் நிலைமை. பொதுவாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டால் உடனே அவர்களது ஆதரவாளர்கள் குவிவார்கள், ஆனால், இங்குள்ள கோஷ்டிப் பூசலில் சில காங்கிரஸ் கட்சியினரே மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal