தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட ‘போட்டி’ வேட்பாளர்கள் 56 பேரை கட்சித் தலைமை நீக்கியது. இந்த நிலையில் இன்று மீண்டும் 48 பேரை நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அவர்கள் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கழக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்டவர்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள்.

வேலூர் மாநகரம், 11-வது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ். சுரேஷ்பாபு, 12-வது வட்ட துணைச் செயலாளர் கராத்தே சி.ஜே.சக்திவேல், 17-வது வட்டத்தைச் சேர்ந்த கே.அசேன்அலி, 18-வது வட்ட பிரதிநிதி வெங்கடேசன், 19-வது வட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 32வது வட்டச் செயலாளர் கேசவன், 40-வது வட்டத்தைச் சேர்ந்த உஷாநந்தினி, 48-வது வட்டச் செயலாளர் ஆதிபாஷா, 58-வது வட்டத்தைச் சேர்ந்த திருமூர்த்தி,

59-வது வட்ட பிரதிநிதி மதிவேந்தன் பள்ளிகொண்டா பேரூர், 18-வது வார்டைச் சேர்ந்த முருகேசன் ஒடுகத்தூர் பேரூர், 1-வது வார்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கருணாகரன், பென்னாத்தூர் பேரூர், 3-வது வார்டு செயலாளர் பி.கே.எஸ்.சந்தோஷ், 4வது வார்டு துணைச் செயலாளர் ஜி.நாகலிங்கம், 10-வது வார்டு செயலாளர் சி.குமார், 12-வது வார்டை சேர்ந்த இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.சரத்பாபு, 13-வது வார்டை சேர்ந்த பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் இ.சிவராஜ்.

பாபநாசம் பேரூர், 2-வது வார்டைச் சேர்ந்த மை.முத்துமேரி, 5-வது வார்டு பிரதிநிதி கே.முத்துப்பிள்ளை, 4-வது வார்டு பிரதிநிதி ஆர்.கீர்த்திவாசன், 5-வது வார்டு ஒன்றிய பிரதிநிதி எம்.முருகானந்தம், 5-வது வார்டை சேர்ந்த வசந்தி சரவணன், இளைஞர் அணி உறுப்பினர் ஆர்.சக்திவேல், 13-வது வார்டை சேர்ந்த பேரூர் மகளிர் அணி அமைப்பாளர் பெ.கோட்டையம்மாள், 14-வது வார்டை சேர்ந்த ஏ.ஆர்.ஜெயராமன், 15-வது வார்டைச் சேர்ந்த ஜே.பாக்கியலெட்சுமி அய்யம்பேட்டை பேரூர், 7-வது வார்டை சேர்ந்த தஸ்லிமா பானு.

கும்பகோணம் மாநகராட்சி 7-வது வார்டை சேர்ந்த வட்டப் பொறுப்பாளர் கே.ரமேஷ் குமார், 14-வது வார்டை சேர்ந்த எஸ்.ஆனந்த், 27-வது வார்டை சேர்ந்த பிருந்தா லெட்சுமணன் திருப்புவனம் பேரூர், 6-வது வார்டை சேர்ந்த எஸ்.குமாரராஜா, 8-வது வார்டை சேர்ந்த ஆர்.ஜெ.வெங்கடேசன், வேப்பத்தூர் பேரூர், 12-வது வார்டு பொறுப்பாளர் சிங்காரவேலு, 13வது வார்டை சேர்ந்த சண்முக நாதன் திருவிடைமருதூர் பேரூர், 12-வது வார்டு, ஒன்றிய பிரதிநிதி கு.சாமிநாதன்.

பட்டுக்கோட்டை நகரம், 4-வது வார்டு பொறுப்பாளர் டி.முத்து, 5-வது வார்டை சேர்ந்த ஜெலகாம்பாள், 26-வது வார்டை சேர்ந்த எஸ்.உமாமகேஸ்வரி, 27-வது வார்டை சேர்ந்த மீனா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோ.விஜயேந்திரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜே.வினோத், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தாமரை ரவிச்சந்திரன், திட்டச்சேரி பேரூர் முன்னாள் செயலாளர் கோ.ரவிச்சந்திரன், திருமருகல் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் கே.குமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ராகவன், 22-வது வார்டு, மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி கி.ரவிச்சந்திரன், காங்கேயம் நகரம், 10-வது வார்டை சேர்ந்த ஹசினா சுல்தானா, 17வது வார்டை சேர்ந்த சோபனா,

கயத்தாறு பேரூரைச் சேர்ந்த, மாவட்ட பிரதிநிதி கே.கோதண்டராமர், மாவட்ட சிறுபான்மை நலஉரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் கே.எம். ஏ.பஷீர்அகமது, மாவட்ட பிரதிநிதி கொம்பையா ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal