கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்தான் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகள்தான் சவுந்தர்யா. பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் சவுந்தர்யா திருமணம் செய்தார்.மத்திய பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் கல்லூரியில் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருவருக்கும் 6 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில் இன்று தமது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கிட்டு சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெங்களூர் ஹைகிரவுண்ட்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை கேள்விப்பட்டதும் முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal