அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி தேர்தலுக்கு ஒருவருடத்திற்கு முன்பே அமைந்துவிட்டதால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது, ‘நாங்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றுவிடுவோம்… எடப்பாடி பழனிசாமி எங்களுக்காக கதவை திறந்து வைத்திருக்கிறார்’ என்று வி.சி.க., கம்யூனிஸ்டுகள் உள்பட காங்கிரஸ் ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் முன்பு கூறிவந்தன.

ஆனால், தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இணைந்து விட்டதால், ‘பி.ஜே.பி. எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்யும்’ தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் தற்போது அ.தி.மு.க. கதவு எங்களுக்காக திறந்திருக்கிறது என்று சொல்லமுடியாது. அப்படிப்பட்ட நிலைதான் இன்றைக்கு தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. த.வெ.க.விற்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கிறது என்பது தெரியவில்லை. தவிர, இத்தனை ஆண்டுகாலம் பழமையான அரசியல் கட்சிகள் திடீரென்று நேற்று அரசியல் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணையவும் மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், ‘நாங்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு போட்டியிடுங்கள்’ என தி.மு.க. தலைமை கூறிவருகிறதாம். இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், தி.மு.க. கூட்டண உடையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதை வைத்தே தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களையும், அதிக ஸ்வீட் பாக்ஸ்களையும் வாங்கிடலாம் என கணக்குப் போட்டு காய்நகர்த்தியது தி-.மு.க. கூட்டணி கட்சிகள். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி அமைந்துவிட்டது.

கடந்த காலங்​களில் தேர்​தல் நெருக்​கம் வரை கூட்​டணி கணக்​கு​கள் மாறிக்​கொண்டே இருக்​கும். அதனால் சிறிய கட்​சிகள் பேர வலிமை​யின் மூலம் கூடு​தல் தொகு​தி​களை பெறும் சூழல் இருந்​தது. தற்​போது தேர்​தலுக்கு ஓராண்​டுக்கு முன்பே அதி​முக & பாஜக கூட்​டணி அமைந்​து​விட்​டது. இதனால், பாஜக-வை எதிர்க்​கும் கட்​சிகளால் அதி​முக பக்​கம் இனி செல்​லவே முடி​யாது. எனவே வழக்​கம் போல திமுக கொடுக்​கும் தொகு​தி​களை வாங்​கிக்​கொண்டு அமை​தி​யாக போக வேண்​டிய சூழலே இம்​முறை​யும் உரு​வாகி​யுள்​ளது.

அதி​முக -& பாஜக கூட்​டணி ஆட்​சிக்கு வரு​வதை தடுக்க, கொடுக்​கும் தொகு​தி​களை வாங்​கிக் கொண்டு நில்​லுங்​கள் என இம்​முறை​யும் தோழமைக் கட்​சிகளுக்கு திமுக சமா​தானம் சொல்​லும். எனவே, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு பேரம் பேச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal