‘நாங்கள் தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்’ என்று எப்போது சொன்னோம் என்று கேட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான், ‘வாக்குறுதி கொடுத்தது உண்மை. நேரம் வரும்போது சில விஷயங்களை சொல்வேன் என்று எல்-.கே.சுதீஷ் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த எல்.கே.சுதீஷ், ‘‘2024 மக்​கள​வைத் தேர்​தல் வரைக்​கும் அவர்​களோடு கூட்​ட​ணி​யில் இருந்​திருக்​கி​றோம். 2024 மக்​களவை தேர்​தலில் பாஜக கூட்​ட​ணியை விட்டு அதி​முக வில​கி​னாலும் நாங்​கள் அதி​முக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்​டோம். இப்​போது அதி​முக-​வும் பாஜக-​வும் மீண்​டும் இணைந்​திருக்​கி​றார்​கள். இனி, மீண்​டும் அனை​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும். தேமு​திக அக்​கூட்​ட​ணி​யில் தொடர்​வதா வேண்​டாமா என்​பதை எங்​களது பொதுச்​செய​லா​ளர் உரிய நேரத்​தில் முடிவு செய்​வார்.

ஜனவரி 9-ல் கடலூரில் தேமு​திக மாநாடு நடை​பெற உள்​ளது. அதில், தேமு​திக யாருடன் கூட்​டணி என்​பதை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் முறைப்​படி அறி​விப்​பார்’’ என்றவரிடம், ‘ தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக முன்னமே வாக்குக் கொடுத்திருந்ததா அதிமுக?’ ‘‘உறு​தி​யாகக் கொடுத்​தார்​கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன்.’’ என்றார்.

மேலும், ‘அப்படி யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை என்கிறாரே இபிஎஸ்?’

‘‘அதி​முக அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்​ளக்​குறிச்​சி​யிலும் 2014-ல் சேலத்​தி​லும் போட்​டி​யிட்​டேன். சேலத்​தில் எனக்​காக மோடி பிரச்​சா​ரம் செய்​தார். 2019-ல் மீண்​டும் பாஜக கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்​சி​யில் போட்​டி​யிட்​டேன். 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது குறித்​தும் யோசிக்​கிறேன்’’ என்றார்.

ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் நம்பிக்கையை இழந்து வருகிறார் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal