மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தவிர, வேட்பாளர்கள் தேர்தவு குறித்தும் மு.க.ஸ்டாலின் பேசியதுதான், மா.செ.க்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
‘நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் செய்யும் மத்திய பா.ஜ.க, அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவிர கூட்டத்தில் முக்கியமான அறிவிப்பை ஒன்றையும் வெளியிட்டார் முதல்வர். அதாவது, ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க. தலைமையே முடிவ செய்யும்’’ என அறிவித்திருக்கிறார். இதனால், ‘துட்டு’ பார்க்க முடியாதே என மா.செ.க்கள் அப்செட்டுடன் திரும்பி செல்ல உள்ளனர்.
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தற்போது உதயநிதி ஸ்டாலின் முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும், உதயநிதி கைகாட்டுபவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என சீனியர்களே கிசுகிசுத்து வருகிறார்கள்.