‘திமுக ஆட்சி 7வது முறை அல்ல ஏழு ஜென்மம் எடுத்தாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வராது. ஸ்டாலின் என்ற சொல் சாதனை சொல் அல்ல,மக்களுக்கு வேதனை சொல். ஒட்டுமொத்தமாக தமிழகத்தை ஸ்டாலின் அரசு சூறையாடி விட்டது’’ என அ.தி.மு.க. மருத்துவ இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்..
இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவ இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன் பேசும்போது, ‘‘ நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்பொழுது தமிழகம் இன்றைக்கு எல்லா துறைகளும் தலை நிமிர்ந்து நிற்கின்றது, தமிழகம் அனைத்து துறைகளும் நிமர்ந்து நிற்கிறது என்றும், ஸ்டாலின் என்றாலே சாதனை என்றும் திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் 7 முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று பேசி உள்ளது அனைத்து மக்களுக்கும் இது ஒரு நகைச்சுவைக்கு தான் பார்க்க முடிகிறது.
கடந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் இதுதான் சாதனை. ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து விட்டு ஸ்டாலின் மகனும், மருமகனும் எங்கே வைப்பது என்று தெரியாமல் உள்ளனர் என்று அப்போது நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் கூறினார்.
அதேபோன்று டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ஊழல், மணலில் 4000 கோடி ஊழல்,பொங்கல் பரிசு வழங்கினார்கள் அதில் 500 கோடி ஊழல், அமைச்சர் நேரு துறையில் முறைகேடு செய்வதாக அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளது மின் கொள்முதலில் ஊழல், திருவண்ணாமலை அருகே 16 கோடியில் பாலம் கட்டினார்கள் 3 மாதத்தில் அந்த பாலம் அடித்து சென்று விட்டது.மேலும் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.ஆர்.மீது கடுமையாக சொத்துக் குறிப்பு வழக்கு உள்ளது.
மேலும் ஒரு அமைச்சராக இருந்தவர் மதத்தை இழிவுபடுத்தி பெண்களின் இழிவு படுத்தி பேசினார் எடப்பாடியார் தொடர்ந்து கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உடனடியாக பொன்முடி பதவியை விட்டு விலக வேண்டும் என்று சொன்னார் என்று அதனை தொடர்ந்து நீதிமன்றம் கண்டித்தது அதன் பிறகு தான் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
இந்த நான்காண்டுகளில் 3.50 லட்சம் கோடி கடன் தற்போது ஒரு லட்சம் கோடி அளவில் கடந்த வாங்க நிர்ணயம் செய்யப்பட்டு இந்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடனை வாங்கிய ஒரே மாநிலம் தமிழகம் என்ற நிலைஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்த வருமானம் 3,31,568 லட்சம் கோடி வருகிறது ஆனாலும் தமிழகம் தொடர்ந்து கடனில் தான் இருக்கிறது
அது மட்டுமல்ல மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு ,பால் விலை உயர்வு, கட்டுமான பொருள் உயர்வு, சமையல் பொருட்கள் உயர்வு இருசக்கர வாகனங்களை வைத்து இருப்போர் சாதாரண மக்கள்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாகன அவதாரத் தொகையை நிர்ணயித்து அதில் கடந்த ஆண்டில் மட்டும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பெற்ற அவதாரத்தை மட்டும் 8 கோடியே 28 லட்சம் ஆகும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 18,000 மேல் போக்ஸோ வழக்குகள் பதிவாகப்பட்டுள்ளது. அதேபோன்று தொழில் துவங்க ஏற்ற மாநில பட்டியலில் பாண்டிச்சேரி கூட இடம் பெற்றுள்ளது ஆனால் தமிழகம் இடம்பெறவில்லை என்பது வேதனையாக உள்ளது. ஸ்டாலின் என்ற சொல் இதன் மூலம் மக்களுக்கு வேதனை சொல்லாகத்தான் பார்க்க முடிகிறது. இனி தமிழகத்தை யாரும் சூறையாட முடியாது என்று ஸ்டாலின் கூறுகிறார் கடன் நான்காண்டுகளில் தமிழகத்தில் திமுக சூறையாடி விட்டது அதை வைத்து அவர் கூறியுள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சிலவற்றை தான் இங்கே குறிப்பிட்டு உள்ளேன் மொத்தமாக குறிப்பிட்டால் ஒரு நாள் கூட போதாது இன்றைக்கு தமிழகம் அனைத்து துறைகளிலும் நிமிர்த்து நிற்கவில்லை தலை சாய்ந்து தான் இருக்கின்றது இனி ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் இன்று ஸ்டாலின் கூறுகிறார் இனி ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் திமுக ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும் என்பது தான் நிதர்சனமான உண்மை’’ என கூறினார்.