‘‘அரசு பள்ளியில் படிக்கும் கூலி தொழிலாளி பிள்ளைகளுக்கும் எடப்பாடியாரின் 7.5 இட ஓதுக்கீட்டின் மூலம் மருத்துவராகியுள்ளனர். மருத்துவத்தில் இந்தியாவின் இதயப் பகுதியாக தமிழகத்தை உயர்த்திய காட்டியவர் எடப்பாடியார்.கொரோனா காலத்தில் நோய் தடுப்பு பணியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று உலகத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் எடப்பாடியார்’’ என துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா சரவணன் பெருமிதத்தோடு பேசியிருக்கிறார்.

துபாய் நாட்டில் தனியார் நிறுவனம் சார்பில் சிறந்த மருத்துவருக்கான விருதினை கழக மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் சரவணன் பெற்று விழாவில் பேசியதாவது; ‘‘விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றும் புனிதப் பணியில், மருத்துவர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்வதால் இறைவனுக்கு நிகராக மக்கள் மருத்துவர்கள் போற்றுகிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தலைவர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றஉழைப்பார்கள் ஆனால் மருத்துவர்கள் அப்படியல்ல தன்னை நாடிவரும் அனைவரையும் காப்பாற்ற உழைப்பவர்கள்.
இன்றைக்கு உலக அளவில் 25 ஆண்டுகளில் விஞ்ஞான ரீதியாக பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது, குறிப்பாக இன்றைக்கு இந்தியாவை எடுத்துக் கொண்டால் அதிக அளவில் மருத்துவ சாதனைகள் புரிந்த ஒரே நாடு தமிழ்நாடு இதற்கு வித்திட்டவர்கள் புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் ஆவார்கள்.
2020 ஆம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா வந்த பொழுது, அப்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் விலையில்லாமல் ரேஷன் பொருள்களை வழங்கினார், அம்மா உணவகத்தின் மூலம் இலவசமாக உணவுகளை வழங்கினார். தமிழகத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என பாரத பிரதமரே பாராட்டினார்.
அதேபோல் கொரோனா மருந்து கண்டுபிடிக்காத காலத்தில் அதை கண்டுபிடித்தால் தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்குவேன் என்று முதன்முதலாக அறிவித்தார். அதேபோன்று மாணவர்களின் மனநிலையை அறிந்து அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அளித்தார், அதேபோன்று அப்போது ஆன்லைன் கிளாஸ் நடைபெற்ற பொழுது 9 லட்சம் மாணவர்களுக்கு 2 ஜி இலவச டேட்டாவை வழங்கினார் இதனை தொடர்ந்து அப்பொழுது சீன நாட்டைச் சேர்ந்த ஒரு தலை சிறந்த மனோதத்துவ மருத்துவர் இந்த செய்தியை அறிந்து இதுபோன்று அனைவரும் பின்பற்றலாம் என்று கூறியுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார், அதன் மூலம் ஆண்டுக்கு 600 மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் கூலி தொழிலாளர்கள் பிள்ளைகளும் மருத்துவ படிப்பு பெற்றுள்ளனர் அதேபோன்று ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரியை உருவாக்கி மகத்தான் சாதனை படைத்தது மட்டுமல்லாதது, கிராமப்புற மக்கள் மருத்துவ வசதி கிடைக்க 2000 அம்மா மினி கிளினிகை உருவாக்கினார்.
உலக அளவில் உடல் உறுப்பு தானங்கள் பல்வேறு நாடு நடைபெற்று வருகிறது ஆனால் இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சி காலத்தில தமிழக அரசு விருது பெற்றது குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இந்தியா மற்றும் அல்லது பல்வேறு வெளிநாட்டவர்கள் மருத்துவ சுற்றுலாவாக தமிழகம் இருந்தது.
அதேபோன்று மருத்துவத்துறையில் அதிகளவில் மருத்துவப் பணியாளர்களை நியமித்து மருத்துவத்துறையை ஒரு சேவை துறையாக தமிழகத்தில் உருவாக்கித் தந்தார் இன்றைக்கு இந்தியாவின் மருத்துவத் துறையை பற்றி பல நாடுகள் பெருமையாக பேசப்பட்டு வந்தாலும் இந்தியாவின் இதய பகுதியாக தமிழகத்தில் மருத்துவ சேவையை உருவாக்கி தந்தவர் எடப்பாடியார் அதை யாராலும் மறைக்க முடியாது,மறுக்க முடியாது’’ என பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் புகழை டாக்டர் சரவணன் கடல் கடந்து பேசியிருப்பதுதான், அ.தி.மு.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.