அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான ‘ஜிக்ஷிபி நிக்ஷீஷீuஜீ’ கட்டுமான நிறுவனத்தில் பணப் பரிவர்த்தனையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜிக்ஷிபி நிக்ஷீஷீuஜீ கட்டுமான நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்ஆர்சி நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கே.என்.நேருவின் மகனும், எம்.பி.யுமான அருண் நேருவுக்குச் சொந்தமான ஆழ்வார்பேட்டையில் உள்ள நிஷிழிஸி ஸிவீநீமீ மிஸீபீustக்ஷீவீணீறீ றிஸ்t றீவீனீவீtமீபீ என்ற நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தவிர, அமலாக்கத்துறை ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து மேலும் சோதனை நடக்கலாம்… அல்லது அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடக்கவும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றுள்ளனர். கே.என்நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையே பிரிண்டிங் மிஷென் முதல் சூட்கேஸ் வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரவிச்சந்திரன் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal