தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.560 கோடி மதிப்பில் 75 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து 8736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘’சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா..  ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் ஆட்சி செய்த பூமி தர்மபுரி. தமிழ் வளர வேண்டும்  என்பதால் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்.

தர்மபுரி என்றதும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அறிவித்தேன். பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி. திராவிட மாடல் அரசு வகுத்த திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் பேசலாம். மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முடக்கியது அதிமுக. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது. பேருந்து வசதி இல்லாத 8 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து செய்து கொடுத்துள்ளோம். 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில 920 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவேற்றம். சேலம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

தர்மபுரி பாரதிபுரத்தில் 36 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம். தர்மபுரி மாவட்டத்தில் 5 சமுதாக நலக்கூடம் அமைக்கப்படும். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க 10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும். சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். எப்போதும் மக்களுக்காகவே செயல்படும் திராவிட மாடல் அரசு.

மத்திய பாஜக அரசு மாநிலங்களை சமமாக நடத்துவது இல்லை. மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது. மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாயை நிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு. மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான். பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது பிரதமருக்கு பாசம் வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய் ஏற்றிவிட்டு தேர்தல் வருவதால் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என நாடகமாடுகிறார்கள் என்று கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal