ஹோட்டல்களில் பிரியானி சாப்பிட்டு விட்டு பில் கொடுப்பதற்கு பதிலாக ஓட்டல் உரிமையாளரை தி.மு.க.வினர் தாக்கிவிடுவார்கள். பின் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஆனால், சாப்பிடாமல் சென்றதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்ட சம்பவம்தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று(ஜூலை 28) ‘என் மண் என் மக்கள்’ என்ற கோஷத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். இந்த பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் இதற்காக வியாழக்கிழமை (நேற்று) மதியம் அண்ணாமலை மதுரைக்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி ஓட்டலில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது. ஆனால் இதுகுறித்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே ஓட்டல் முன்பு கட்சி கொடிகளுடன் காத்திருந்தவர்களை பார்த்துள்ளார். தன் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கருதி அவர்களுக்கு ‘சைகை’ காட்டிவிட்டு திருப்புவனத்தை தாண்டிச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள், மதிய உணவு குறித்து அவருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக ஓட்டல் உரிமையாளர் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அண்ணாமலை, ‘ஸாரி அண்ணா. ஓட்டல் முன்பு கூட்டம் இருந்ததால் கடந்து சென்றுவிட்டேன். உடனடியாக ‘ஹி’ டர்ன் செய்து ஓட்டலுக்கு வரமுடியவில்லை. அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ராமேஸ்வரத்தில் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (இன்று) தொடங்கி வைக்கிறார். இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும்.

அண்ணாமலை மன்னிப்பு கேட்ட விவகாரத்தைதான் பா.ஜ.க.வினர், ‘இது தி.மு.க. அல்ல பா.ஜ.க.’ என பெருமையுடன் பேசி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal