முன்னால் சென்ற பேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு பேருந்து மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (45) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal