பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடும் அறிக்கை… மற்றும் பேட்டிகள் புள்ளி விபரங்களுடன் இருப்பதால் ஆளுங்கட்சி கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் ‘வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்.. தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்’ என அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசிய சம்பவம் அதிர்ச்சியாக இருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் கே என் நேரு திருச்சியில் பேசுகையில், பிளவுப்பட்டு கிடக்கும் அதிமுகவின் இரு அணிகளையும் பாஜகதான் ஒன்று சேர விடாமல் தடுக்கிறது.

அதிமுக ஒன்றிணையாமல் இருந்தால்தான் பாஜகவால் சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதால் தடுக்கிறது. பாஜகவினர் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வரும் 4ஆம் தேதி வருகிறாரா என்பது நாளைதான் தெரியும். வெட்கத்தை விட்டு சொல்கிறேன்-தமிழக அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்’’ என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேட்டி அவரது தி.மு.க.வினரின் பதற்றத்தை வெளிக்காட்டியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal