அ.தி.மு.க.வினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கிறது. இதில் எடப்பாடி தரப்பிற்கு எதிராக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் அப்பாவு!

தமிழக சட்ட பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமீது இப்ராகிம், கே கே வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ் புருஷோத்தமன் , திருவேங்கடம், ஜனார்த்தனன், தர்மலிங்கம், எம் ஏ ஹக்கீம், கோவை தங்கம் உள்ளிட்ட 10 மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து இராமநாதபுரம் இளைய மன்னர் இராஜ.நாகேந்திர குமரன் சேதுபதி ,விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், ஐக்கிய இராஜ்ஜியத்தின் இராணி இரண்டாம் எலிசபெத்.மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சாமிவேலுஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங், முன்னாள் பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் மறைவு குறித்து பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையின் இன்றைய அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர், எம்எல்ஏ-க்கள் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர், எம்எல்ஏ-க்கள் இருக்கைகளில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பட்டியலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். அதில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களில் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது. அதேபோல் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை. பட்டியலை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். அதில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்களில் பட்டியலில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் பெயர் உள்ளது. அதேபோல் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறவில்லை.

ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளில் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர் செல்வம் இருவரும் அருகருகே அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal