தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியிலுள்ள வீட்டிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal