நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து மற்றும் விமானம் மாயமாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில்தான் நேபாளத்தில் இருந்து 22 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு நடுவானில் மாயமாகியுள்ளது.

பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானிய பயணிகள் இருந்ததாகவும், மற்றவர்கள் நேபாளிகள் என்றும் முதற் கட்டமாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal