தி.மு.க. கூட்டணியில் ராஜ்யசபா சீட்டிற்கு காய் நகர்த்தி வருகிறார் முன்னாம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்த நிலையில்தான் ப.சிதம்பரமரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரமரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றர்.

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எதற்காக ரெய்டு நடத்தப்படுகிறது. எந்த வழக்கிற்காக என்ற முழு விபரம் இன்னும் முழுமையாக தெரிவில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal