’வீ த லீடர்​ஸ்’ அமைப்பு விரை​வில் அரசி​யல் கட்​சி​யாக மாறும். 2031-ல் தமிழகத்​தில் ஆட்​சியை பிடிப்​போம் என, பொள்​ளாச்​சி​யில் நடந்த மாநாட்​டில் அண்​ணா​மலை பேசி​னார்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் முதல் மாநாடு பொள்​ளாச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது. அமைப்​பின் தலைமை வழி​காட்​டி​யான அண்​ணா​மலை பேசி​ய​தாவது: பொள்​ளாச்சி மண்​ணில் பெரிய எதிர்​பார்ப்​போடும் நம்​பிக்​கையோடும் எல்​லோரும் நின்று கொண்டு உள்​ளோம். இது ஒரு மாவட்​டத்​தில் ஒரு போதை ஒழிப்பு மாநாடுதான், உங்​கள் நம்​பிக்​கையை பார்க்​கும் போது எல்லா பக்​கமிருந்​தும் வந்​திருக்​கின்​றனர். இங்கு இருக்​கின்ற தன்​னார்​வலர் ஒரு​வரின் தந்தை தற்​பொழுது தான் உயி​ரிழந்​தார். அவர் குடிப்​பழக்​கத்​திற்கு உள்​ளானவர். அதை​யும் தாங்​கிக்​கொண்டு போதைக்கு எதி​ராக அந்த தன்​னார்​வலர் இங்கு நின்று கொண்​டுள்​ளார். போதைக்கு எதி​ராக வலு​வாக உள்​ளோம்.

38 நாளில் 19 லட்​சம் பேர் உறுப்​பின​ராக சேர்ந்​துள்​ளனர். தமிழகத்​தில் நல்​ல​வர்​கள் இருக்​கிறார்​கள், வாய்ப்​புக்​காக காத்​திருக்​கிறார்​கள். இந்த இயக்​கம் எனது குடும்​பத்​திற்கு சொந்​த​மானது கிடை​யாது, உங்​களுக்​கானது. இந்த அமைப்பை பொறுத்​தவரை நானும் ஒரு தன்​னார்​வலர் தான். இந்த இயக்​கத்​தின் உறுப்​பினர்​கள் 50 லட்​சத்தை எட்​டும் போது நிரந்​தர​மாக ஒரு நல்ல சமூகம் உரு​வாகும். சுற்​றுச்​சூழலை பாது​காக்க 50 லட்​சம் மரக்​கன்​றுகளை நட உள்​ளோம்.

ஆறு மாதம் இலக்கு வைத்​துள்​ளோம். செப்​டம்​பர் மாதம் பெண்​கள் பாது​காப்பு குறித்​தும், அக்​டோபர் மாதம் குழந்​தைகள் நலன் என ஆறு மாதங்​களில் ஆறு முக்​கிய பிரச்​சினை​களை எடுத்து தீர்வு காண உள்​ளோம்​. ‘வீ த லீடர்’ அமைப்​பில் 17 சதவீதம் மகளிர் இருக்​கிறார்​கள். இன்​னும் அதி​க​மாக வேண்​டும். 2031 ல் ஆட்சி மாற்​றம் ஏற்​படும், ஆறு மாதங்​கள் முழு​மை​யாக சமூக பணி செய்​வோம். மக்​கள் நம்​மிடம் வரு​வார்​கள்.

ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை மாதம் போதைக்கு எதி​ரான மாத​மாக கடைபிடிப்​போம், புதி​தாக ஆட்​சிக்கு வந்​தவர்​களுக்கு இடையூறு ஏற்​படுத்​து​வது நமது நோக்​கம் அல்ல, அதற்​கான மாநாடு இது அல்ல. குடும்​பத்​தில் ஏற்​படும் வன்​முறை, சாலை விபத்து என எல்லா இடத்​தி​லும் பிரச்​சனை​களுக்கு காரண​மாக மது இருக்​கிறது. 2026 ஆம் ஆண்டு ஒரு கோடியே 65 லட்​சம் வாக்​காளர்​கள் வாக்​களித்து ஒரு அரசை தேர்ந்​தெடுத்​துள்​ளார்​கள். அந்த அரசுக்கு மரி​யாதை கொடுக்க வேண்​டும்.

புதிய அரசில் உள்ள அமைச்​சர்​கள் பெரும்​பாலானோர் முதல் முறை​யாக அமைச்​ச​ரானவர்​கள். அதனால் தடு​மாற்​றம் இருக்​கத்​தான் செய்​யும், தடு​மாறும் போது தூக்கி விட வேண்​டும் கீழே அழுத்​தக்​கூ​டாது. போதை ஒழிப்பு குறித்து ஒரு ஆண்​டுக்​கான வெள்ளை அறிக்கை கொடுத்​துள்​ளோம்​.​நான் இறு​மாப்​புடன் சொல்​வேன் தேசி​ய​வாதி என்​று ஜாதி மதத்தை வீட்​டில் வைத்து பூட்டி விட்டு தான் வந்​துள்​ளேன். கரூர் இனாம் நிலம் விஷ​யத்​தில் தவெக வுக்கு ஆதர​வாக உள்​ளேன் என சொல்​கிறார்​கள். என்னை இந்து விரோதி என்​கிறார்​கள்.

இதே இனாம் நிலத்தை அதில் இருப்​பவர்​களுக்கு வழங்க வேண்​டும் என ஹெச்.ராஜா பேசி​னார், பழனிசாமி பேசி​னார். அவர்​கள் இந்து விரோ​தி​கள் இல்​லை, ஆனால் என்னை இந்து விரோதி என்​கிறார்​கள் மதம் ஜாதி அடை​யாளத்தை வீட்​டுக்​குள் பூட்டி வைத்து விட்டு தான் வெளியே வந்​துள்​ளேன். தமிழகத்தை முதன்மை மாநில​மாக மாற்ற வேண்​டும் என்​பது இலக்கு. அதை நோக்​கித்​தான் உழைப்பு இருக்​கும்.

‘வீ த லீடர்ஸ்’ அரசி​யல் கட்​சி​யாக மாறப்​போகிறது அதற்​கான சரி​யான நேரம், தலை​மை, எண்​ணிக்கை வரும். கிராமந்​தோறும் சென்று மக்​களை சந்​திக்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள ஒவ்​வொரு தனி நபர் மீதும் 4 லட்​சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்​ளது. தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி கடன் வாங்​கும், அடுத்த ஆண்​டும் அதே​போல் கடன் வாங்​கும். நாம் ஆட்​சிக்கு வரும் போது அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் உலகத்​தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்​கப்​படும்.

உண்​மை​யான சமூக நீதி, நிலை​யான வளர்ச்​சி, விவ​சா​யத்​தில் எழுச்​சி, பண்​பாட்டு மீட்​சி, அரசி​யல் புரட்சி நமது இலக்​காக இருக்​கும்​.தமிழகத்​தில்​ 2031-ல்​ ஆட்​சி​யை பிடிப்​போம்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​. மாநாட்​டில் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்​.

தீர்மானங்கள்

போதைக்கு எதி​ரான விழிப்​புணர்வு ஏற்​படுத்த ஆண்​டு​தோறும் ஜூலை மாதம் வெள்ளை பட்டை மாத​மாக கடைபிடிக்​கப்​படும்.

கல்வி நிறு​வனங்​களில் போதைப்​பொருள் எதிர்ப்பு குழுக்​களை உரு​வாக்க வேண்​டும்.

வேலைக்கு செல்​லும் தொழிலா​ளர்​கள், இளைஞர்​கள் காலை நேரத்​தில் மது​பானம் அருந்​து​வதை தடுக்க கள்​ளச்​சந்தை மது விற்​பனை, கஞ்சா ஆகிய​வற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். அரசு அனு​மதி பெற்ற எப்​எல் 2 மது​பானகூடங்​களில் விதி​மீறலில் ஈடு​படு​பவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

புதிய எப்​எல் 2 மது​பான கூடத்​துக்கு அனு​மதி வழங்​ககூ​டாது. போதைப்​பொருள் தடுப்பு சட்​டத்தை வலுப்​படுத்த வேண்​டும் என்பன உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal