தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதம் 18ம் தேதி சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை அ.தி.மு.க.வின் சீனியரான எஸ்.பி.வேலுமணி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவரிடம் பேசினோம். ‘‘தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர்.தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால்அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி இருந்தார். அதிமுக ஆட்சியில் நிழல் முதல்வர் என்றும் வேலுமணியை அழைத்தனர். கட்சியிலும், ஆட்சியிலும் அவர் பவர்புல்லாக இருந்தார். ஆட்சியை இழந்தும் கட்சியில் வேலுமணி செல்வாக்குடன் இருந்தார். கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். அவ்வபோது கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் எடப்பாடி – வேலுமணி நெருக்கமாகவே இருந்தனர்.
ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களிடையே விரிசல் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் தோல்வி எடப்பாடி வேலுமணியை பகையாளியாக மாற்றிவிட்டது. எடப்பாடிக்கு எதிராக பனிப்போர் நடத்தி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம்பெற முயற்சி செய்தார் வேலுமணி. அது நடக்கவில்லை. இதனால் வேலுமணி மீண்டும் எடப்பாடியிடம் சரண்டரானார். மோதல் நிலவிய போது நமது அம்மா நாளிதழ், நியுஸ் ஜெ தொலைக்காட்சி ஆகியவற்றை வேலுமணி கைப்பற்றினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி பறித்தார். எடப்பாடியிடம் சரண்டராகிவிட்டதால் தன்னுடைய பழைய பதவி கிடைக்கும் என்று வேலுமணி நினைத்தார். பதவி கிடையாது என்று எடப்பாடி கறாராக உள்ளார். கோவை அதிமுக அலுவலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேலுமணி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்.
அதையும் அவரால் தக்க வைக்க முடியவில்லை. அவர் வசம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியில், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி நியமிக்கப்பட்டு அவர் சார்ஜ் எடுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வேலுமணியின் ஆதரவாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். மாவட்ட செயலாளர் பதவியேற்பு நிகழ்வுக்கு வேலுசாமியே நேரடியாக வேலுமணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் கோவையில் இருந்து கொண்ட வேலுமணி புறக்கணித்துவிட்டார்.
பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு சென்றபோது வேலுமணியை துரோகி என்று அழைத்து அவமானப்படுத்தினர். இதனால் அதிருப்தியான வேலுமணி திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அடுத்தடுத்த பிரச்சனைகளால் நொந்து போன வேலுமணி சிங்கப்பூர் சென்றுவிட்டாராம். தன் குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் ஓய்வு எடுக்க சென்றுள்ளாராம். அவருடன் நெருங்கிய உறவினர்கள் சிலரும் சென்றுள்ளனர். வேலுமணி அங்கு சில பிசினஸ்களை செய்து வருகிறாராம். சில வாரம் அங்கு தங்கியிருக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் வேலுமணி கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு. காரணம், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமே என்ற எண்ணவோட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம்’’ என்ற அதிர்ச்சி குண்டை போட்டார்.
இதற்கிடையே த.வெ.க., தி.மு.க.வில் சேர்வதற்கான முயற்சியில் இறங்கினார் புதுக்கோட்டை விஜயபாஸ்கர். விஜயபாஸ்கர் தி.மு.க.வில் இணைவதற்கு ‘மாஜி’ அமைச்சர்கள் இருவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், தாங்கள் டம்மி ஆகிவிடுவோம் என்பதுதான். இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிராகஇது குறித்து சி.விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் ‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது, எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்லஞ் எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
