அ.தி.மு.க. குறித்து விஜய்யிடம் திருமா கேள்வி எழுப்பியிருப்பது, இருகட்சிகளும் கைகோர்த்துவிடுமோ என்ற எண்ணத்தில்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ‘‘கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும் எடுக்​கவில்லை என்​பது வேதனைக்​குரியது. தமிழகத்​தில் சங்​பரி​வார் அரசி​யல் எந்த வகை​யிலும் நுழை​யாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்​தி​களும் ஓரணி​யில் திரள வேண்​டும்.

நடிகர் விஜய்க்கு மத்​திய அரசு ஏற்​கெனவே ஒய் பிரிவு பாது​காப்பு வழங்​கி​யுள்​ளது. தாமத​மாக தற்​போது அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமிக்கு மத்​தியஅரசு இசட் பிளஸ் பாது​காப்பு வழங்கி உள்​ளது. இதை நாங்​கள் வரவேற்​கிறோம். அந்​தக் கூட்​ட​ணி​யில் பெரிய கட்சி அதி​முக​தான். ஆனாலும், தேர்​தலுக்​குப் பின்​பு​தான் முதல்​வரை தேர்ந்​தெடுப்​போம் என்று சொல்​லக்​கூடிய நிலை இருக்​கிறது. இது தொடர்​பாக பழனி​சாமி​தான்விளக்​கம் அளிக்க வேண்​டும்.

திமுக, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தவெக தலை​வர் விஜய், அதி​முக பற்றி எது​வும் கூற​வில்​லை. எனில், அவர் அதி​முகவை தோழமைக் கட்​சி​யாகப் பார்க்​கிறா​ரா? இந்​தக் கேள்விக்கு விஜய் விடையளிக்க வேண்​டும்’’ இவ்​வாறு திரு​மாவளவன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை திருமா வரவேற்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மீது திருமாவுக்கு திடீர் கரிசனம் ஏன் என்ற கேள்வியை எழுப்புவதோ? அ.தி.மு.க. & த.வெ.க. கூட்டணி அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் திருமா மனதிற்குள் எழுந்திருப்பதால்தான், ‘அ.தி.மு.க.வை விஜய் தோழமை கட்சியாகப் பார்க்கிறாரா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal