அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான், ‘‘அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல’’ என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று மேலும் கூறிய​தாவது: திமுக கூட்​டணி உறு​தி​யாக இருக்​கிறது என்​கிறார்​கள். ஆனால், அந்த கூட்​டணி உதிர்ந்து போகிற நிலை​யில்​தான் உள்​ளது. கூட்​டணி கட்​சி​யாக இருந்​தா​லும் கூட கொடியேற்​று​வதற்கு அனு​மதி கிடைப்​ப​தில் சிரமம் இருக்​கிறது என திரு​மாவளவன் கூறுகிறார். ஆனாலும், அவர் அந்த கூட்​ட​ணி​யில்​தான் ஒட்​டிக்​ கொண்​டிருக்​கிறார். திமுக இன்​னும் பல வாக்​குறு​தி​களை நிறை வேற்​ற​வில்லை என கூட்​டணி கட்​சி​யினரே சொல்​கிறார்​கள்.

கூட்​டணி கட்​சி​யினர் திமுகவை கேள்வி கேட்க தொடங்​கி​விட்​டார்​கள். மக்​களிடம் வாக்கு கேட்டு வந்​தால், மக்​களே கேள்வி கேட்​பார்​கள். எனவே, அமித் ஷா கூறியதுபோல, திமுக கூட்​டணி மாறு​வதற்கு வாய்ப்​பிருக்​கிறது என்​பதை உறு​தி​யாக சொல்​கிறேன். அதி​முக – பாஜக கூட்​டணி பலமான கூட்​ட​ணி. கூட்​டணி குறித்து அமித் ஷா கூறியது தான் கட்​சி​யின் நிலை​ப்பாடு.

அதி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது அவரது சொந்த கருத்​து​தானே தவிர, கட்​சி​யின் கருத்து கிடை​யாது. அதி​முக – பாஜக கூட்​டணி குறித்து அமித் ஷா, நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட அதி​காரப்​பூர்​வ​மான தலை​வர்​கள் சொல்​வது தான் கட்​சி​யின் கருத்​து.

அண்​ணா​மலை சொல்​வது அவரது தனிப்பட்ட கருத்​து. எனவே, தனிப்​பட்ட கருத்​துக்​களுக்கு நான் விமர்சனம் செய்​வ​தில்​லை. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் யாரெல்​லாம் இணை​வார்​கள் என்​பதை பொறுத்​திருந்து பார்ப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal