தமிழகத்தில் என்கவுண்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ். பொறுப்பேற்ற பிறகு என்கவுண்ட்டர்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் என்கவுண்ட்டர் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், வழக்கறிஞருமான டாக்டர் சரவணன் கருப்புசாமி என்கிற எஸ்.கே.சாமி அகில இந்திய வழக்கறிஞர்கள் நலச்சங்கம் சார்பில் புகார் அளித்திருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு 15 நாட்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம்தான் தமிழ்நாடு டி.ஜி.பி.சங்கர் ஜிவாலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்கறிஞர் எஸ்.கே.சாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.