2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பேட்பாளர்களை தி.மு.க. தலைமையே முடிவு செய்யும் என முதல்வர் அறிவித்திருப்பது மாவட்டச் செயலாளர்களை அப்செட் ஆக்கியிருப்பதோடு, கனிமொழியின் ஆதரவாளர்களும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘‘வேட்பாளர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும் என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம் தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.

அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாக செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமைக்கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.

பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்க காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்கு காரணம், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்’’ என்று பேசினார்.

தி.மு.க., அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் மாவட்டச் செயலளர்கள் மூன்று பேர் பெயரை பரிந்துரை செய்து தலைமைக்கு அனுப்புவார்கள். இதில் ஒருவரை தலைமையும், மாவட்டச் செயலாளர்களும் தேர்வு செய்வார்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் உதயநிதயின் கையே ஓங்கியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால், கனிமொழியின் தீவிர விசுவாசிகள் அப்செட்டில் இருக்கின்றனர்.

இது பற்றி கனிமொழியின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கலைஞர் இருக்கும் போது தென் மாவட்டங்களில் மிகவும் பவர்புல்லாக இருந்தவர் மு.க.அழகிரி. தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். அதன் பிறகு அப்படியே அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கிறார் அழகிரி. ஆனால், கனிமொழி தூத்துக்குடி எம்.பி.யாக இருக்கிறார். டெல்லியில் தி.மு.க.வின் ‘சக்தி’யாகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில்தான் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் கனிமொழி கைகாட்டுபவர்களாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால், வேட்பாளர்களை தி.மு.க. தலைமை முடிவு செய்யும் என நேற்று ஸ்டாலின் அறிவித்திருப்பது அவர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

காரணம், கட்சிக்காக தவறு செய்யாமலேயே சிறைவாசம் அனுபவித்தவர் கனிமொழி. மத்திய அரசு பல மாநிங்களில் கட்சியை உடைத்து ஒரு ‘ஏக்நாத் ஷிண்டே’வை உருவாக்கி வருகிறது.அதற்கெல்லாம் கனிமொழி துளியும் இடம்கொடுக்காமல், அண்ணன் (ஸ்டாலின்) பாதையில் பயணித்து வருகிறார். அப்படியிருக்கும்போது, அக்கா கைகாட்டுபவர்களுக்கு தலைவர் சீட் கொடுக்க வேண்டும்’’ என்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal