இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை படைத்தாலும், சாதாரண அலுவலகங்கள் முதற்கொண்டு அரசியல் களம் வரை ஆணாதிக்கம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தி பகிர்ந்த பதிவுதான் சிந்திக்க வைக்கிறது, ‘‘இன்று காலை இந்த DP பதிவு எனக்கு whatsapp இல் அனுப்பப்பட்டது !

பல வருடங்களுக்கு முன்பு ஆணாதிக்கம் பற்றி நான் ஆங்கிலத்தில் படித்த விளக்கத்தை அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

“பெண்கள் ஆணாத்திக்கத்தால் பாதிக்கப்படுவதற்கு ஆண்கள் மட்டும் காரணம் அல்ல அவர்களோடு சேர்ந்து அத்தகைய மனப்போக்கை வழிவகுக்கும் காரணியாக ஒரு சில பெண்களின் பங்ஙகளிப்பும் உள்ளது. இத்தகைய ஆண்கள் உருவாகுவதற்கு காரணம் அவர்கள் தாயார் ஒடுக்கப்பட்ட குடும்ப சூழ்நிலையில் தாய் மற்றும் கணவர் வீட்டில் உள்ள கட்டமைப்பில் வேறு வழியில்லாமல் வாழ்ந்து வருவாதால்தான்.

எனவேதான் இத்தகைய கட்டமைப்பு உள்ள ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்கு என்ற ஒரு இடத்தை சுயமரியாதையோடு தக்க வைத்து கொள்ள கடுமையாக போராட வேண்டியுள்ளது. ஆண்களுக்கு அவர்கள் பிறந்த முதல்நாளிலிருந்தே இயல்பாகவே அதிக சலுகைகளை இச்சமுதாயம் வழங்குகிறது என்பதே உண்மை’’ இதுதான் மையக்கருத்து.

ஆதனால்தான் முதல் கட்டமாக பாலியல் வேற்றுமை களைந்திடும் மிகப்பெரிய பொறுப்பு (சுமை) பெற்ற தாயானவள் பாலின வேற்றுமையின்றி வளர்நது உணரும் சுழலை விட்டினில் முதல் ஏற்பட்டுத்த வேண்டும். பெற்றோர்களுக்கு அல்ல! அப்போதுதான் அவள் கணவனுக்கு குழந்தைகள் பிதாமகள் அல்லது பிதாமகனாக வழிகாட்டியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.

மகள்களை நேசிக்கும் தந்தையினால் பெற்ற தாயும் தன் கணவருடன் இணைந்து சில நேரம் போராடி மகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு போராடுவாள்.

அநேக இல்லங்கள் தந்தையை இழந்தபிறகு மகள்களின் தந்தையின் மாயச்சுவர் காற்றோடு கலந்துவிடுகிறது. அதுவும் மகன்கள் இருந்தால் அடுத்த கட்ட வாழ்க்கை மகன்களோடுதான் என ஆண்டாண்டு காலமாக மனுசாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பெண்கள் எப்போது அப்பா, கணவன், மகனை சார்ந்திருக்க வேண்டும் என தனக்கே ஒரு வேலியை அமைத்து கொள்கின்றாள்.

ஆயிரம் ஆண்மகன்களை சார்ந்திருக்கும் அம்மாக்கள் மத்தியில் நான் என் மகள் என்னை கவனித்து கொள்கின்றார் என கூறும் அம்மாக்கள் எத்தனை பேர்? பெண்களாகிய நாம் நம் எண்ண போக்கை மாற்றினால்தான் ஆணாதிக்கத்தின் வீரியம் குறைந்து சமதள சமுதாயம் உருவாகும்!’’ என்பதுதான் அந்தப் பதிவு!

தனியார், அரசு அலுவலகங்கள் முதற்கொண்டு, அரசியல் களம் வரை பெண்கள் போராடிதான் வெற்றி பெறுகின்றன. ஆண்களுக்கே அரசியல் களம் சாதரணமல்ல என்ற நிலையில் பெண்கள் எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் அரசியல் களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal