நகர்ப்புற வளர்ச்ச்த்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் டி.வி.எச். நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருகிறது.
இந்த சோதனை தொடர்பாக கடந்த 11ம் தேதி அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 07/04/2025 அன்று சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத் துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பணமோசடி தடுப்புச் சட்டம் ((PMLA)), 2002ன் கீழ் M/s Truedom EPC India Pvt Ltd நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய ரூ. 30 கோடி கடன் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக M/s Truedom EPC India Pvt Ltd உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காற்றாலை தொடர்பான எந்த முன் அனுபவம் இல்லாத இந்த நிறுவனம், 100.8 MW மின்சாரம் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதாக போலியாக ஒப்பந்தம் போட்டு கடனை பெற்று தவறாக பயன்படுத்தியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும் இந்த நிதி பிரிக்கப்பட்டு, இந்நிறுவனத்துக்கு தொடர்புடைய M/s True Value Homes Pvt Ltd மற்றும்M/s TVH Energy Resources Pvt Ltd ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை சோதனையின் போது பணத்தை மோசடியாக பயன்படுத்தியதற்கான பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக என். ரவிச்சந்திரன் மற்றும் அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நபர்கள் நிதியை மாற்றி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சான்றுகள் கூறுகின்றன.
கூடுதலாக, இந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவண சான்றுகள் மூலம், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறைக்குள் (MAWS) ஊழல் வலையமைப்பு வேரூன்றியிருப்பது தெரியவருகிறது.
மாநிலம் முழுவதும் ஏராளமான ஹவாலா பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு லஞ்சம் வசூலித்ததற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊழல் வலையின் முழு நோக்கத்தையும் கண்டறிந்து, அதன் விளைவாக பொது கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பைக் கணக்கிட தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தின் மூலம் சொத்துகள் மற்றும் சேர்க்கப்பட்ட வருமானம் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விஷயத்திற்கு வருவோம். அதாவது அ.தி.மு.க. ஆட்சிகாலத்தின் போது வங்கியில் கடனாக பெறப்பட்ட பணத்தை, மோசடியாக டி.வி.எச். கட்டுமான நிறுவனத்திற்கு மாற்றியிருக்கின்றனர். அந்தக் கடனைக்கூட அவர்களால் (கே.என்.நேருவின் குடும்பத்தால்) அடைக்கமுடியவில்லை.
ஆனால், 2021ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி.எச். கட்டுமான நிறுவனத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிறது. கடனை எல்லாம் பைசல் செய்ததாக கூறப்படுகிறது. கடனில் தத்தளித்த ஒரு நிறுவனம் ‘படையப்பா’ பட ரேஞ்சில் ஒரே பாடலில் எப்படி உச்சத்தை அடைந்தது என்பதுதான் அமலாக்கத்துறை எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.
அமலாக்கத்துறை சோதனையின் மூலம் கைப்பட்டப்பற்ற டிஜிட்டர் பரிவர்த்தனைகள், ஆவணங்கள் அடிப்படையில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. வங்கியிடம் இருந்து பணத்தை பெற்று முறைகேடாக டி.வி.எச். நிறுவனம் பெற்றது ஆதாரத்துடன் இருக்கிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் டி.வி.எச். நிறுவனத்தின் பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரத்தில்!
அமலாக்கத்துறையின் பிடி இறுகினால், அமைச்சர் கே.என்.நேருவின் குடும்பம் மிகப் பெரிய சிக்கலை சந்திக்கும். அதாவது, சுமார் ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இந்திருக்கிறார். அமைச்சர் நேருவின் குடும்பம் ரூ.30 கோடியை பெற்று முறைகேடாக டி.வி.எச். நிறுவனத்திற்கு மாற்றியதை ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கையில் வைத்திருக்கிறது.
தவிர, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி கடனில் தத்தளித்த டி.வி.எச். கட்டுமான நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்தது. எங்கெல்லாம் முதலீடுகள் போடப்பட்டிருக்கிறது என அலசி அராய்ந்து வருவதால், அமலாக்கத்துறை பிடியிலிருந்து கே.என்.நேரு குடும்பம் தப்பிப்பது மிக கஷ்டம் என்கிறார்கள்.