தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘திமுக அரசின் ஆயிரம் கோடி ரூபாய், டாஸ்மார்க் ஊழலுக்கு காரணமான முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் என்று நேற்று தலைவர் அண்ணாமலை குற்றம் காட்டியதை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழகப் பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மார்க் நிறுவனத்தின் ஊழல் குறித்து அமலாக்கத்துறை மற்றும் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் டாஸ்மார்க் நிறுவனத்தின் கொள்முதல் விற்பனை உள்ளிட்ட நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவில் ஊழலை அடியோடு ஒழிக்க விரும்பும் பிரதமர் மோடியின் குரல் தமிழக மக்கள் மனதில் வலுவாக ஒலிக்க துவங்கி விட்டது. டெல்லி சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமான சாராய ஊழல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்க போகிறது.

தமிழக முதல்வர் உடனடியாக விழித்துக் கொண்டு, முதற்கட்டமாக திமுகவின் தேர்தல் அறிக்கையில், டாஸ்மார்க் கடைகளை மூடுவேன் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்ததை நினைவில் கொண்டு, பெண்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற பாவத்திற்கு பிராயசித்தமாக, சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியையும் முன்னாள் சாராய அமைச்சர் முத்துசாமியையும் அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து, தமிழக மகளிர் உரிமைக் குரலாக, முன்னுதாரணமான முதல்வராக செயல்பட வேண்டும்.

திமுக அரசின் ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மார்க் நிறுவன ஊழலை கண்டித்து நேற்று பாஜக ஜனநாயக முறைப்படி நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் எழுச்சியை நசுக்கவோ, அடக்கவோ, தடுக்கவோ முடியாமல் தமிழக அரசு
திணறியதை, காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளை தமிழகமே பார்த்தது.

பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதை போல,ஏழாவது முறையாக பாஜகவின் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து, பாஜக தொண்டர்களின் மீது பயங்கர அடக்கு முறையை ஏவி விட்டு, விரட்டி விரட்டி கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து, நியாயத்தைக் கேட்க வந்த பாஜக தொண்டர்களை கிரிமினல் குற்றவாளிகள் போல மிக மோசமாக நடத்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஊது குழலாக, சட்டத்திற்கு புறம்பாக, மனித உரிமை மீறலை துணிந்து அரங்கேற்றி இருக்கிறது.

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நைனார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி என அனைத்து முக்கிய முன்னணி தலைவர்களை காவல்துறை அவமானப்படுத்தி நடத்தியதோடு, கைது செய்கிறோம் என்று வாகனத்தில் அழைத்து சென்று அலைக்கழித்து, சென்னை முழுக்க திருமண மண்டபங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்ட குவிந்து இருந்ததால், முக்கிய தலைவர்களை, பெண்களை நடுத்தெருவில் இறக்கி விட்ட கொடுமை என காவல்துறையின் அரக்கத்தனமான செயல்கள், தமிழக அரசின் ஆணவப் போக்கை வெளிப்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறையின் செயல்பாடுகள் அமைந்தது மிக மோசமான முன்னுதாரணமாகும்.
தமிழகம் முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட பாஜகவினரை, மனரீதியாக துன்புறுத்தி ,காவல் நிலையங்களில் குற்றவாளிகளை போன்று நிற்க வைத்து புகைப்படம் எடுத்ததோடு, மிரட்டி எச்சரித்து அனுப்பிய தமிழக காவல்துறை துறையின் செயல்பாடுகளை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.

பாஜகவின் மீது மிக மோசமான இத்தனை மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகள் நடந்திருந்தும், திமுகவின் ஆட்சிக்கு இது மிக மோசமான இழுக்கு என்று அறிந்திருந்தும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வெட்கப்படாமல், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு சாபக்கேடு” என்று கோவில் சொத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு துணை போகும் அரசியல் சாக்கடை, ஏழை மக்களுக்கு மளிகை சாமான் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் “மளிகை கடை மேனேஜர் மாமா”வாக கம்பு சுற்றும் அரைவேக்காடு அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு கடும் கண்டனத்தை பாஜக சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.

பாஜகவை அடக்குவது, தலைவர் அண்ணாமலையை அவமானப்படுத்த நினைப்பது, பாஜக தொண்டர்களை காவல்துறை மூலம் பொய் வழக்குகள் போட்டு மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்வது, என அரசியல் அதிகார திமிரோடு செயல்படும் திமுக அதிகார வர்க்கத்தினருக்கும், குறிப்பாக ராங் கால் ரகுபதிகளும், ஆலந்தூர் தற்குறிகளும் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவார்கள். அண்ணாமலை குறித்த வீணான வாய்ச்சவடால் விமர்சனங்களை விடுத்து, மக்கள் பணி செய்யுங்கள் என்றும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத, தீய சக்தி திமுக ஆட்சி வீழ்த்தப்பட்டு பாஜக அமைக்கின்ற மக்கள் நல கூட்டணி ஆட்சி தமிழகத்தை ஆளப் போகிறது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்கு உணர்ந்து, விளம்பரம் முதல்வராக விதவிதமான கெட்டப்களில் பேசி நடித்து வருகிறார். மேலும் பாஜகவின் போராட்டங்களை தொடர்ந்து காவல்துறையை ஏவி விட்டு ஒடுக்க நினைத்து காங்கிரசின் “மிசா’’ காலத்தை நினைவுபடுத்தும் வழியில், “மிசா” முதல்வராக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

நேற்று தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட போகும், தமிழகப் பெண்களின் தாலியை அறுத்து வருமானத்தை ஈட்டி வரும் டாஸ்மார்க் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து பாஜக நடத்திய முற்றுகைப் போராட்டம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு முடிவுரையை எழுதத் துவங்கிவிட்டது’’ என்று அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal