பெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மீண்டெழ நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதற்காக தமிழக அரசு விதித்துள்ள சில விதிகள்தான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 இலட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10 ஆயிரம். முழுமையாகச் சேதமடைந்த குடிசைகளுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ. 17 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்லாண்டுப் பயிர்கள், மரங்களுக்கு ரூ. 22,500. எருது, பசு உயிரிழப்புக்கு – ரூ.37,500: வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு – ரூ. 4,000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அடையாள அட்டைகள், சான்றிதழ்கள் இழந்தோருக்குச் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். மாணவர்களுக்குப் புதிய பாடப்புத்தகங்கள் & நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் இரு நாட்களுக்கு மேல் மழைவெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இறந்து போன ஆடு மாடுகளுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்தால் மட்டும் நிவாரணம் வழங்கப்படும் என்று உள்ளூர் விஏஓ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாடுகள் வேறு நோயால் மரணம் அடைந்ததை காட்டி பணம் வாங்க கூடாது.. இல்லாத மாட்டை இறந்து போனதாக சொல்லி பணம் வாங்க கூடாது.. என்பதை எல்லாம் தடுக்க மாடுகளுக்கு, ஆடுகளுக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பல மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் அந்த மாடுகளுக்கு எப்படி போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியும். காணாமல் போன மாடுகளை எப்படி கடலில் சென்று கண்டிபிடிக்க முடியும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal