திமுக திராவிட மாடல் என ஏமாற்றும். பாஜக இண்டியா மாடல் என ஏமாற்றும் என நடிகை அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில்: ‘‘மண்டியிட்டு வாழ்வதை விட, சண்டையிட்டு சாவது மேல் என வீரம் விளைஞ்ச மண், இந்த மதுரை மண். கடவுள் ஆண்ட பூமி இது. தேவர் அய்யா வாழ்ந்த பூமி. பாசமும் ரோஷமும் கோபமும் அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் இந்த மதுரை மக்கள். பொதுவாக டாக்டர் என்றால் நேரம் காலம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் மக்கள் சேவை செய்றவங்க. நமது வேட்பாளர் டாக்டர் சரவணனும், எம்.பி.யாகி டெல்லி சென்றால், நேரம் காலம் பார்க்காமல் உங்களுக்கு சேவை செய்வார்.

பாஜக கூட்டணியில் டிடிவி. தினகரனையும், ஓபிஎஸ் ஐயும் பயங்கரமாக அசிங்கப்படுத்துகிறார்கள் எவ்வளவு மரியாதையோடு வாழ்ந்தவர்கள் அவர்கள். நீங்கள் எல்லாம் யோசித்துப் பாருங்கள். இவர்கள் மக்களுக்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்களா? என்று. அவர்களின் சுயநலத்திற்காக, அவர்களின் வாரிசுகளுக்காக, அவர்களுடைய ஆதாயத்திற்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். தயவு செய்து பாஜக கூட்டணியை நம்பாதீர்கள். திமுகவிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. திமுக பயங்கரமாக பொய் சொல்லும். பாஜக, சொல்ற பொய்யை, பயங்கரமாகச் சொல்லும். திமுக, திராவிட மாடல் என ஏமாற்றும். பாஜக, இண்டியா மாடல் என ஏமாற்றும்.

திமுக, கடவுளை திட்டிக்கிட்டே சாமி கும்பிடும். பாஜக, கடவுளே திட்ற அளவிற்கு சாமி கும்பிடும். ஸ்டாலின், மகனைப் பற்றி மட்டுமே யோசிப்பார். மோடி, மதத்தைப் பற்றி மட்டுமே யோசிப்பார். ஸ்டாலின், தினமும் விக் வைப்பார். மோடி, ஒரு நாள் நாட்டையே விக்க வைப்பார். மனைவி, மகன், மருமகளுக்கு, ஸ்டாலின் பினாமி. மோடி, அம்பானி அதானிக்குப் பினாமி. திமுக மக்கள்கிட்டேயே திருடுவாங்க. பாஜக, மாநிலங்கள் கிட்டயே திருடுவாங்க. திமுக திருட்டு ஸ்பெஷலிஸ்ட். பாஜக உருட்டு ஸ்பெஷலிஸ்ட்.

பாஜகவும், திமுகவும் ஆபத்தானவர்கள். மக்களுக்கு இரண்டு பேருமே தேவை இல்லை. தேர்தல் வந்தால் போதும், மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நிறைய பேசுவார்கள். இஷ்டத்திற்கு தேர்தல் அறிக்கை எல்லாம் தருவார்கள். 500 ரூபாய்க்கு கேஸ் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் சிலிண்டரில் கேஸ் இருக்காது. 75 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் அரை லிட்டர் தான் தருவார்கள். 65 ரூபாய்க்கு டீசல் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் தகுதியான டிரைவர்ஸ்க்கு மட்டுமே தருவோம் என்பார்கள். தேர்தல் சமயத்தில் மக்களை ஏமாற்ற, திமுக என்ன வேண்டும் என்றாலும் பேசும். தேர்தலுக்கு முன்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தலுக்குப் பின்னாடி திமுக ஒரு மாதிரி பேசுவாங்க. தேர்தல் சமயத்தில் திமுக, வோட்டு மட்டும் பற்றியே கவலைப் படுவார்கள். தேர்தல் முடிஞ்ச பிறகு, அவங்க வீட்டை மட்டும் பற்றியேக் கவலைப்படுவார்கள்’’ என நடிகை விந்தியா பேசியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal