அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நாளை (செப்​.16) டெல்லி செல்​கிறார். குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்தெடுக்​கப்​பட்ட சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்​வ​தாக அதி​முக தலைமை அலு​வல​கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்கி வரும் நிலை​யில், அரசி​யல் கட்​சிகள் கூட்​டணி வியூ​கங்கள் குறித்து ஆலோ​சித்து வரு​கின்​றன. அதி​முக​வில் ஒன்​றிணைப்பு குரலை முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் எழுப்​பி​யுள்​ளார். அதனால் அவரது கட்சி பொறுப்​பும், ஆதர​வாளர்​களின் கட்சி பொறுப்​பு​களும் பறிக்​கப்​பட்​டுள்​ளன.

இதையடுத்து டெல்லி சென்ற செங்​கோட்​டையன், மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷாவை சந்​தித்​து, அதி​முக ஒன்றிணைந்தால் மட்​டுமே, திமுகவை வீழ்த்த முடி​யும் என்​பதை வலி​யுறுத்​தி​யுள்​ளார். டெல்லி சென்று திரும்​பிய பிறகு அவர் அமைதி காத்து வரு​கிறார்.

கட்சி ஒன்​றிணைப்பு தொடர்​பாக செங்​கோட்​டையன் விதித்த கெடு​வும் செப்​.15-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இந்​தச் சூழலில் 16-ம் தேதி அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி டெல்லி சென்​று, அமித் ஷாவை சந்​திக்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

நேபாளத்​தில் கலவரம் உச்​சகட்​டத்தை அடைந்​திருந்த நிலை​யில், அதை உற்​று​நோக்க வேண்​டிய மத்​திய உள்​துறை அமைச்​சர், செங்​கோட்​டையனை சந்​திக்க நேரம் ஒதுக்​கியதும், தமிழகத்​தில் அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் தேர்​தலை சந்​திக்க இருக்​கும் பாஜக, அதி​முக தலை​மை​யால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்ட ஒரு நபரை சந்​தித்​ததும் பழனி​சாமிக்கு வருத்​தத்தை ஏற்​படுத்தி இருப்​ப​தாக தெரி​கிறது.

இதுதொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக, அமித் ஷாவை சந்​திக்​கும் நோக்​கில் டெல்லி செல்​வ​தாக பழனி​சாமிக்கு நெருங்​கிய வட்​டாரங்​களில் கூறப்​படு​கிறது. இந்த சந்​திப்​பின்​போது, இதர கட்​சிகளை கூட்​ட​ணி​யில் சேர்க்​கும் நடவடிக்​கைகள், பாமக​வின் நிலைப்பாடு, தவெக​வின் செயல்​பாடு​கள், தமிழக அரசி​யல் நில​வரம் தொடர்​பாக மத்​திய அரசுக்கு வந்​துள்ள உளவுத் தகவல்​கள் உள்​ளிட்​டவை குறித்​தும் இந்த சந்​திப்​பில் விவா​திக்க இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் அதி​முக தலைமை வெளி​யிட்ட அறிக்​கை​யில், பழனி​சாமி நாளை செப்​டம்பர் 16-ம் தேதி புதுடெல்லி செல்​கிறார். அங்கு அவர் குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்​“ என தெரிவித்துள்ளது.

ஆக மொத்தத்தில் தேர்தல் வியூகம் குறித்து நாளை அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal