காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ( டிசம்பர் 21 ) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்​தில் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட அந்த வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டிருந்தது. இதனால், கடந்த அக்​.27-ம் தேதி நில​வரப்​படி, 6.41 கோடி வாக்​காளர்​கள் இருந்த நிலை​யில், தற்​போது 5.44 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்நாயக் தெரி​வித்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது, மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவரும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் இக்கூட்டம் கவனம் பெறுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal