வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விருப்ப மனு வினியோகத்தை இன்று (டிசம்பர் 15) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, எடப்பாடி பழனிசாமியிடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே, அ.ம.மு.க.,வும் காங்கிரசும், விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (டிச.,15) தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

கட்சியினர் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்களை பெறலாம். பூர்த்தி செய்து, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal